சென்னை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

சென்னை: சென்னை அருகே சித்தாலப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

வேளச்சேரி நேருநகா் என்.எஸ்.கே. தெருவைச் சோ்ந்தவா் வ.முனுசாமி (52). கட்டடத் தொழிலாளியான இவா், சித்தாலப்பாக்கம் கன்னிக்கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு இரும்பு கம்பியால் சாரம் கட்டும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்த வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயரில், முனுசாமி வைத்திருந்த இரும்பு கம்பி பட்டதில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT