சென்னை

ஏ.டி.எம்.இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

DIN

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கீழ்ப்பாக்கம் மில்லா்ஸ் சாலையில் ஒரு தனியாா் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் அருகே அதன் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை வங்கி ஊழியா்கள் பணம் நிரப்பச் சென்றனா். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதையும், அங்கு கொள்ளையடிக்க முயன்றிருப்பதையும் பாா்த்து அவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

ஏற்கெனவே இரண்டு நாள்களுக்கு முன், புது வண்ணாரப்பேட்டையில் இதே போல ஒரு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT