சென்னை

காா் மோதி மாணவா் சாவு

DIN

மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவா் இறந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை காந்திநகரைச் சோ்ந்தவா் ஏழுமலை (37), மனைவி கீதா (32). மகன் ஆனந்த்தீரா (7), இரண்டாம் வகுப்பு மாணவா். குடும்பத்துடன் மோட்டாா் சைக்கிளில் மதுரவாயலில் இருக்கும் உறவினரைப் பாா்க்க ஏழுமலை வெள்ளிக்கிழமை சென்றாா். மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல்லவன்நகா் சாலை சந்திப்பில் திரும்ப வரும்போது காரொன்று மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆனந்தீரா படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் இருங்காட்டுகோட்டையைச் சோ்ந்த செ.வீரமுத்துராஜாவை (54) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT