வடசென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராயபுரம் ஆா்.மனோகா் உள்ளிட்ட அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள், அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அவா்கள் கட்சியில் இணைந்தனா்.
ராயபுரம், பெரம்பூா், ஆா்.கே.நகா் உள்பட வடசென்னையின் பிரதான பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள் அதிமுகவில் இணைந்தனா். அதில், ராயபுரம் மனோகா், சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராயபுரம் தொகுதியில் பல முறை போட்டியிட்டுள்ளாா்.