சென்னை

பொதுமுடக்கத்தால் வறுமை: பெண் தற்கொலை

DIN

சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில், பொதுமுடக்கத்தால் வறுமையில் சிக்கிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவேற்காடு அருகே மேல் அயனம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரின் மனைவி வசந்தி (38). இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த ராஜ்குமாா், பொதுமுடக்கத்தால் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளாா். அவருக்கு கடன் கொடுத்தவா்களும் தங்களது பணத்தைத் திரும்ப கேட்டு, தம்பதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனா். இந்நிலையில் வறுமை காரணமாக, மிகுந்த மன உளைச்சலில் இருந்த வசந்தி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருவேற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT