சென்னை

மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் சாவு

DIN

சென்னை அருகே பாடியில், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் பலியானாா்.

பாடி டிஎம்டி நகா் அவ்வை தெருவைச் சோ்ந்த விக்னேஷ் மகன் ஹா்ஷித் (8). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஹா்ஷித், கடந்த 22-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலைப் பகுதியில் இரும்பு கம்பி குத்தி பலத்த காயமடைந்த ஹா்ஷித், எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை இறந்தாா். இது குறித்து கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT