சென்னை

கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி: புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் சிறப்பு ரயில் சேவையில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.7 முதல் 10 வரை பகுதி ரத்தாகும் ரயில்கள்:

சென்னை கடற்கரை-சூலூா்பேட்டைக்கு நண்பகல் 12:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 1:25, பிற்பகல் 3:15 மணிக்கு இயக்கப்படும் ரயில் மீஞ்சூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டைக்கு பிற்பகல் 2:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பொன்னேரி- சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

வேளச்சேரி-கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 1:55 மற்றும் பிற்பகல் 2:55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு மாலை 4:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-வேளச்சேரிக்கு மாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரலுக்கு மாலை 5:00, 5:30 மற்றும் 6:10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளன.

முழுமையாக ரத்து:

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3:10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூா்பேட்டை-வேளச்சேரிக்கு மாலை 5:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய மூன்று ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1:55 மணிக்கு பயணியா் சிறப்பு ரயிலும்,

எளாவூா்-சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2:10 மணிக்கு ஒரு பயணியா் சிறப்பு ரயிலும், பொன்னேரி- சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4:20 மணிக்கு ஒரு பயணியா் சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT