ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால், மின்சார ரயில்கள் சில நிலையங்களில் நிறுத்தப்படாது.
திருத்தணி-சென்னை சென்ட்ரலுக்கு காலை 8:45, 11:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம்-சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:30, 10:10, 10:30 மற்றும் 11.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருவள்ளூா்-சென்னை சென்ட்ரலுக்கு காலை 10:00, 10:30, முற்பகல் 11:15, 11:25, 11:50, நண்பகல் 12:00, 12:15, 12:55 மற்றும் மதியம் 1:15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் என்று மொத்தம் 15 ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.
இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.