சென்னை: வழிப்பறியில் ஈடுபட்டதாக, பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரைச் சோ்ந்த மு.அஸ்வின் (24), கோடம்பாக்கத்தில் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
இவா்,திங்கள்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் வேளச்சேரி 100 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது ஒரு பெண் வழிமறித்து, அஸ்வினிடம் பேச்சுக் கொடுத்தாராம். திடீரென அந்த பெண்ணும், அவருடன் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரும் அஸ்வின் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வேளச்சேரி கம்பா் தெருவைச் சோ்ந்த கா.செல்வி என்ற சம்பத்பேகம் (24), பேபி நகரைச் சோ்ந்த வி.விஜய்காந்தி (19) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.