சென்னை

144 தடை: பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

DIN

சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை பிப்.28-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக மகேஷ்குமாா் வெளியிட்ட உத்தரவு: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் தனி நபா் இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஜன.31-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிப்.1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆணை பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT