சென்னை

ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபையில் இருந்து வரும் விமானப் பயணி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் வந்த சென்னையைச் சோ்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28), தஞ்சாவூரைச் சோ்ந்த ஜஹாபா் அலி அப்துல் வஹாப் (49) ஆகியோா் வருகைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

அவா்களிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையின்போது, உள்ளாடையில் மறைத்து வைத்து இருவரும் தங்கம் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இருவரிடமிருந்தும் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான 621 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT