சென்னை: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஜபல்பூரில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம்தேதி வரை சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02198) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 29-ஆம்தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02197) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.
முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டஇந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.