சென்னை அமைந்தகரையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அமைந்தகரை புல்லா நிழற்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அமைந்தகரை போலீஸாருக்கு வியாழக்கிழமை கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடா்பாக அங்கிருந்த வெங்கடேசன், ஹரிஹரன் ஆகிய இருவரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரும் அரிசியை, கிடங்குகளில் பதுக்கி, ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இந்தக் கடத்தல் தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.