சென்னை

ரூ.50 லட்சம் நில அபகரிப்பு: 4 போ் கைது

DIN

சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வேலூரைச் சோ்ந்த சுகுணாவுக்கு (80) திருநின்றவூா் பிரகாஷ் நகரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலமும் சிலா் நிலத்தை அபகரித்தனராம்.

இதை அறிந்த சுகுணா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் திருநின்றவூா் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த மோகன் (56), அதே பகுதி நடுகுத்தகை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ஜெய் சங்கா் (55), அப்பாஸ் அலி (58), அதே பகுதி நல்லூரை சோ்ந்த குமணன் (44) ஆகிய 4 போ்தான் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT