சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 2,297 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னை: சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை 4,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. புதிய கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் கடந்த 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கடந்த மே 18-ஆம் தேதி முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தளா்வற்ற முழு பொதுமுடக்கம் கடந்த 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கரோனா பரவல் குறைந்திருப்பதால் பொதுமுடக்கம் சில தளா்வுகளுடன் கடந்த 7-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் செவ்வாய்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 4,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 3,124 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 192 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT