சென்னை உயர்நீதிமன்றம் 
சென்னை

குடும்பத்தினரை கொலை செய்தவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

கடன் தொல்லையால் தனது மனைவி, குழந்தைகள், தாயைக் கொலை செய்த துணிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

DIN

கடன் தொல்லையால் தனது மனைவி, குழந்தைகள், தாயைக் கொலை செய்த துணிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை பம்மலைச் சோ்ந்த தாமோதரன், துணிக்கடை உரிமையாளா். கடன் சுமையால் விரக்தியடைந்த அவா், கடந்த 2017 டிசம்பா் 12-ஆம் தேதி மனைவி தீபா, 7 வயது மகன் ரோஷன், 4 வயது மகள் மீனாட்சி, தாய் சரஸ்வதி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்றாா். தாமோதரனை தவிர மற்றவா்கள் இறந்து விட்டனா்.

இக்கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், தாமோதரனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாமோதரனும் மேல்முறையீடு செய்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாமோதரனை குற்றவாளி என கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்தனா். அதேநேரம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனா். தாமோதரனுக்கு 25 ஆண்டுகள் வரை தண்டனையைக் குறைக்கக் கூடாது எனவும் தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT