சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயங்கும்: உரிமையாளா்கள் தகவல்
சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் சனிக்கிழமை கூறியதாவது: பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து, தளா்வில்லா பொதுமுடக்கம் அமலாவதையொட்டி இரண்டு நாள்கள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. திடீரென வெளியான இந்த அறிவிப்பால், சாலை வரி செலுத்தாதது, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அனைத்து பேருந்துகளையும் எங்களால் இயக்க முடியவில்லை.
தமிழகம் முழுவதும் தயாா் நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் இருந்து இரண்டு நாள்களுக்கும் சுமாா் 400 பேருந்துகள் இயக்கப்படும். இது தொடா்பாக அனைத்து இணையதள முன்பதிவு தளத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டு, முன்பதிவு தொடங்கியுள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.