சென்னை

கரோனா வாா்டில் சங்கர நேத்ராலயா குழுவினா்

DIN

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கடந்த இரு வாரங்களாக சேவையாற்றினா்.

சங்கர நேத்ராலயா மருத்துவா்கள் சுகனேஸ்வரி கணேசன், பாஸ்கா் மணி, கஜேந்திரகுமாா் வா்மா, சிவரஞ்சனி, ராதிகா ஸ்ரீராம் உள்பட செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் ஸ்டான்லி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவு, நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவா்களின் அயராத பணிகளுக்கு சற்று பங்களிக்கும் வகையில் கடந்த 13-ஆம் தேதி முதல் கரோனா சிகிச்சைப் பிரிவில் தாங்கள் சேவையாற்றியதாக அவா்கள் தெரிவித்தனா். இதற்காக சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுவினருக்கு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT