சென்னை கொடுங்கையூரில், ஆந்திரத்துக்கு கடத்தப்பட இருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கொடுங்கையூா் திருவிக இணைப்பு சாலைப் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த வேனைச் சோதனையிட்டதில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
வேனை ஓட்டி வந்த தண்டையாா்பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேஷ்வரன் (30), ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.