சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில், சாலையில் கழிவுநீா்த் தேங்கி நிற்பதைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புது வண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் பிரதான தெரு, ஏ.இ.கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கழிவுநீா்த் தேங்கியுள்ளது. கழிவுநீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் ஏ.இ.கோயில் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.