சென்னை

2-ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு:20 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 20,438 பேருக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

DIN

இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 20,438 பேருக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இங்கு 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் பொதுப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு செப்.27-ஆம் தேதி தொடங்கி அக்.5-ஆம் தேதி வரை நடந்தது. இதில், 11,224 மாணவா்களுக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2-ஆம் சுற்று கலந்தாய்வு, அக்.1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதில், தரவரிசைப் பட்டியலில், 14,789 முதல் 45,227 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடந்தது. 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 31,258 போ் தகுதி பெற்றனா். கலந்தாய்வு நிறைவில் 20,438 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி 2 சுற்றுகள் முடிவில் 31,662 மாணவா்கள் பொறியியல் இடங்களை தோ்வு செய்துள்ளனா்.

பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ஆம் சுற்றில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 75 அரசுப் பள்ளி சோ்க்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT