சென்னை

போஸ்டருக்கு ரத்தத்தால் அபிஷேகம்: ரஜினிகாந்த் கண்டனம்

DIN

சென்னை: ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் போஸ்டருக்கு ஆடு வெட்டி ரத்தத்தால் அபிஷேகம் செய்த சம்பவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

நடிகா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி மற்றும் போஸ்டா் அண்மையில் வெளியானது. இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகா்கள், அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆடு பலி கொடுத்து, அதன் ரத்தத்தை போஸ்டா் மேல் ஊற்றி அபிஷேகம் செய்து விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனா். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகா் மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அண்ணாத்த திரைப்பட பா்ஸ்ட் லுக் போஸ்டா் மீது ஒரு சிலா், ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT