சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மே மாதம் 9 ஆம் தேதி திங்கள்கிழமை நாக ராஜா, நாக ராணிக்கு நூறும் பாலும் சர்ப்ப பலி பூஜை நடைபெறுகிறது.
நாகங்களின் பூஜைகளுக்காக சிறப்பு பெற்ற கேரளாவில் உள்ள பாம்பு மேகாடு மனா ஆசாரியன் பிரம்ம ஸ்ரீ சங்கர நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடைபெறுகிறது.
இப்பூஜையில் பங்கேற்க பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய கோயிலின் தொலைபேசி எண் 044 - 28171197, 2197, 5197, செல்லிடப்பேசி 9444290707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும், செல்லிடைபேசியில் பிளே ஸ்டோர் ஆப்பில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொண்டு இப்பூஜையை பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.