முகப்பு
தமிழ்நாடு

பெரியகுளம் டூ அறிவாலயம்! ஓபிஎஸ் கடந்துவந்த பாதை..

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் பற்றி...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 5:30 AM
ஓ. பன்னீர்செல்வம்
பகிர்:

தமிழக அரசியலில், எப்போதும் விசுவாசம் போற்றப்பட்டு வருகிறது. ஆனால், அத்தகைய விசுவாசம் நீண்ட காலத்துக்கு நீடிப்பதில்லை.

இதனால்தான், ஓ. பன்னீர்செல்வத்தின் திமுக வருகையானது குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. இவரின் அரசியல் வாழ்வு, எழுச்சி அல்லது வீழ்ச்சியான கதையாக மட்டுமின்றி, மாறாக சக்திவாய்ந்த ஓர் அரசியல் தலைவரின் சகாப்தம் முடிந்தால், நிகழ்த்தப்படும் நடைமுறை அரசியலையும் காட்டுகிறது.

நம்பகமான ஓர் அமைப்பில் (அதிமுக) ஓபிஎஸ் உயர்ந்தார். அதிமுகவில் நம்பகமானவராகவும், மரியாதைக்குரியவராகவும், நிச்சயமற்ற தருணங்களில்கூட பாதுகாப்புடனும் அவர் வலம் வந்தார். இதனை வைத்தே அவர் பலமுறை உச்சமும் சென்றிருக்கிறார்.

ஆனால், 2016-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது அரசியல் வாழ்வு தலைகீழாக மாறியது.

அரசியல் வாழ்வில், அவருக்கான நிலைத்தன்மையை வழங்கவில்லை. மாறாக - வேகம், உரிமை மற்றும் சொந்த அதிகார அமைப்பை உருவாக்கும் திறனைக் கோரியது. ஆனால், அங்குதான் ஓபிஎஸ் தடுமாறினார்.

அவரது வீழ்ச்சியை எளிதாக விவரிக்க வேண்டுமென்றால், அவர் முடிவெடுக்க முடியாதவராக இருந்தார் என்பதுதான். ஆனால், அதுதான் உண்மை. சாதகமான அரசியல் மாறும்வரையில் அவர் காத்திருப்பதுபோல் தோன்றியது.

சரியான தருணத்தில், அவரது விசுவாசம், அனுபவம், அவரின் நன்னடத்தை ஆகியவை இறுதியில் அவரை சரியான பாதையில் இட்டுச் செல்லும் அவர் நம்பியதாகத் தெரிகிறது.

summary

The path travelled by Former Chief Minister O Panneer Selvam

முழு கட்டுரையைப் படிக்க →