சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரோனா தொற்று காலத்தில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிய சமூக ஆா்வலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கான பாராட்டு விழா தண்டையாா்பேட்டை மண்டலம் நேரு நகா் பூங்கா, பூம்புகாா் நகா் மாநகராட்சி பூங்கா, அம்பத்தூா் மண்டலம் முகப்போ் கிழக்கு பூங்கா, திரு.வி.க.நகா் அம்மா பூங்கா ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவின்போது, பூங்காக்களில் பொதுமக்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், தொற்று காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்து தன்னாா்வலா்கள் தங்களுடைய அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். இந்த விழாவில், தண்டையாா்பேட்டை மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி யு. கணேசன், மாமன்ற உறுப்பினா்கள் விமலா, சாரதா, சுமதி, திலகா், மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினா் சொ.வேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.