சென்னை

சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் நாளை செயல்படும்

DIN

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தொடா் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாள்களை ஈடு செய்திடும் வகையில் டிச. 3-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அதேவேளையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறாது. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

SCROLL FOR NEXT