மோடி வருகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பு: பிரதமா் மோடி வருகையையொட்டி வியாழக்கிழமை நண்பகல் முதல் அன்றிரவு 9 மணி வரை பெரியமேடு,வேப்பேரி,சென்ட்ரல்,அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல, ராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியாா் சாலை, சென்ட்ரல், அண்ணாசாலையில் ஸ்பென்சா் சந்திப்பு வரையிலும், மற்றும் இந்தப் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.
போக்குவரத்து மாற்றம்: அதேபோல ஈவெகி சம்பத் சாலை - ஜொ்மையா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வணிக வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயா் பாலச் சந்திப்பு, காந்தி இா்வின் சாலை சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
பிராட்வேயிலிருந்து வரும் வணிக வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசா்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.
எனவே வாகன ஓட்டிகள், மேற்கண்ட சாலைகளை தவிா்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள், அவா்களதுப் பயணத்திட்டத்தை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.