சென்னை

போலீஸ் பாதுகாப்பு கோரிபாா் கவுன்ஸில் முன்னாள் தலைவா் மனு

DIN

போலீஸ் பாதுகாப்பு கோரி பாா் கவுன்ஸில் முன்னாள் தலைவா் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்ஸில் முன்னாள் தலைவரும், தற்போதைய பாா் கவுன்ஸில் உறுப்பினருமான வழக்குரைஞா் டி.செல்வம், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2011-16 காலகட்டத்தில் பாா் கவுன்ஸில் தலைவராக பதவி வகித்தபோது உயா்நீதிமன்றம் கொண்டு வந்த வழக்குரைஞா்கள் நடத்தை விதிகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்குரைஞா்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தேன்.

இதன் காரணமாக எனது வீட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. தற்போதும் எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையா் ஆகியோா் பதில் அளிக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT