சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் வியாழக்கிழமை மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் வியாழக்கிழமை மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை சற்று இடைவேளை விட்டிருந்த நிலையில் மாலை நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்றன.
இதையும் படிக்க | ‘ரஞ்சிதமே’: விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ
அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை மழை பெய்ததால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் சிரமத்திற்குள்ளாகினர்.