சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் மழை பெய்யாத சூழலில் மாலை வேளையில் நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்று வருகின்றன.
இதையும் படிக்க | ‘காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை’: அமித்ஷா விமர்சனம்
இந்நிலையில் வியாழக்கிழமை அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. சென்னையில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கே மழை கொட்டித் தீர்த்தது.