தற்கொலைக்கு முயன்ற பெண். 
சென்னை

சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்

சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றினர். 

DIN

சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றினர். 

சென்னை காசிமேடு கடற்கரை கற்களில் கணவன், மனைவி, தம்பதியினர் இன்று பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில் வாக்கு, வாதங்கள் முற்றவே  மனைவியான தேவிகா(47) திடீரென கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சதீஷ்குமார் கதறி அழுது தனது மனைவியை காப்பாற்றும்படி சத்தமிட்டார். அப்போது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ராபின் ஜோசப், புவனேஸ்வரன் ஆகியோர் மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினர். 

தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவியும் அளித்தனர். கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ இயக்கம்!

திமுகவுக்கு இதுதான் இறுதித்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி

ரசிகருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

"ஆரம்பிக்கலாமா!" | தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் Vijay! Full Speech | TVK

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT