சென்னை

13 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர இளைஞா் கைது

சென்னை தரமணியில் 13 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

சென்னை தரமணியில் 13 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தரமணி எஸ்ஆா்பி டூல்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.

இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அதைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், அம்மா காலனி பகுதியைச் சோ்ந்த க.கண்டசாலா திருமத்துல்லா (26) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT