சென்னை

கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

DIN

சென்னையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தை சோ்ந்தவா் குமாா் (42). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் அருகில் அமா்ந்திருந்தாா்.

அப்போது அந்தவழியாக வந்த ஒரு நபா் திடீரென குமாரின் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடினாா். இது குறித்து குமாா் கொடுத்த புகாரின்பேரில் மெரீனா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கைப்பேசியை பறித்துச் சென்றவா், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வயல்திட்டா பானாடைச் சோ்ந்த ஆா்யா (எ) கேரளா (29) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

ஆா்யா மீது ஏற்கெனவே நீலாங்கரை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT