சென்னையில் மோசமான காற்றின் தரம்
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசின் அளவு மோசமான நிலையை எட்டியது.
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசின் அளவு மோசமான நிலையை எட்டியது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாடினர்.
சென்னையில் பல்வேறு வயதினரும் காலை முதல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். அதேசமயம் அதீத பட்டாசு பயன்பாடு காரணமாக நகர் முழுவதும் புகை சூழ்ந்தது.
இந்நிலையில் சென்னையில் தீபாவளியன்று காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. காற்று தர அளவீட்டின்படி 176ஆக சராசரி பதிவாகியுள்ளது.