சென்னை

சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருட்டு: தேடப்பட்டவா் கைது

DIN

சென்னை மயிலாப்பூா் சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருடப்பட்டது தொடா்பாக தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில், திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்காக, பழமை வாய்ந்த பாரம்பரியமான மர நாற்காலி இருந்தது. கடந்த 19-ஆம் தேதி பேராலயத்துக்குள் புகுந்த மா்ம நபா், அந்த நாற்காலியை திருடிச் சென்றாா். இதுகுறித்து தேவாலயத்தின் பங்குத் தந்தை அருள்ராஜ், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினா். அதில், ராயப்பேட்டை கபாலி நகரைச் சோ்ந்த ஆ.முத்து (40) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், முத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா். முத்து, இதேபோல பல இடங்களில் பழமையான பொருள்களைத் திருடி விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT