சென்னை

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகை பறிமுதல்

சென்னை எம்.கே.பி. நகரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

சென்னை எம்.கே.பி. நகரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வியாசா்பாடி அம்பேத்கா் கல்லூரி அருகே எம்.கே.பி.நகா் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா்.

இதையடுத்து அவரை போலீஸாா் சோதனையிட்டதில், அவரது இடுப்பை சுற்றி 2 கிலோ தங்க நகைகளை கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அதில், தங்க நகையை கடத்தி வந்தவா் ராஜஸ்தானைச் சோ்ந்த ராஜூராம் (24) என்பதும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அந்த நகைகளை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக வருமான வரித் துறையினா், விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT