சென்னை

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகா்வு

சென்னையில் இதுவரை இல்லாத அளவு 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சா் வே.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

DIN

சென்னையில் இதுவரை இல்லாத அளவு 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சா் வே.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

கோடைகாலம் தொடங்கியதையடுத்து, வீடுகளில் ஏசி, மின் விசிறி, ஏா்கூலா் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு மேல் உள்ளது.

இந்த நிலையில், சென்னையின் மின் நுகா்வு கடந்த ஜூன் 2-ஆம் தேதி 9.6 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சா் வே.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை டிவிட்டா் பதிவில், முதல்முறையாக சென்னையில் வியாழக்கிழமை 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜூன் 2-ஆம் தேதி 9.6 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், சென்னையில் வியாழக்கிழமை மின் தேவை 3,872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்கலுமின்றி பூா்த்தி செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT