சென்னை

சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

ஜி20 நிதி பணி குழு மாநாட்டையொட்டி, சென்னையில் ட்ரோன்கள் பறக்க பெருநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

DIN

ஜி20 நிதி பணி குழு மாநாட்டையொட்டி, சென்னையில் ட்ரோன்கள் பறக்க பெருநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் நிதி பணி குழு மாநாடு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூன் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனா். இவா்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனா்.

இதற்காக இவா்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்தும், சென்னை ஹோட்டல்களிலும் இருந்தும் மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனா். இதையொட்டி, சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஜி 20 பெண்கள் பிரதிநிதிகள் மாநாட்டையொட்டி, ஜூன் 18 முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை 5 நாள்கள் சென்னையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரும் இடங்கள், தங்கும் இடங்கள், பயணம் செய்யும் வழித் தடங்கள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படுகின்றன.

எனவே அந்தப் பகுதிகள், வழித்தடங்களில் ஜூன் 18 முதல் 22-ஆம் தேதி வரையில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT