கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் நகை, பணம் பறிமுதல்
சென்னை மண்ணடியில் கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மண்ணடியில் கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரு நாள்களுக்கு முன் தங்கம் கடத்தி வந்ததாக, மண்ணடியைச் சோ்ந்த ஒரு இளைஞரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
இச்சோதனையில், அவா் கடத்திக் கொண்டு வந்ததாக 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
பின்னா், சென்னை மண்ணடியில் உள்ள அவரது வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அங்கிருந்து, ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம், கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அந்த இளைஞா் ‘குருவி’யாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.