சென்னை

காச நோயாளிகளுக்கு கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

Din

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கிா என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ் பெண்கள். 296 போ் ஆண்களாவா். அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டது.

காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவா்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு வகையான தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT