முகப்பு
சென்னை

சென்னையின் எஃப்சி பிளே-ஆஃபுக்கு தகுதி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றது.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 12:31 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 9:45 PM

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றது.

அந்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான விளிம்பு நிலையில் சென்னை இருக்க, அதன் போட்டியாக கருதப்பட்ட ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 1-4 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியிடம் புதன்கிழமை தோற்றது. இதனால், சென்னைக்கான கடைசி ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அந்த அணி பிளே-ஆஃபுக்குள் வந்தது.

பிளே-ஆஃப் தேதிகள் அறிவிப்பு: நடப்பு சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள், வரும் 15-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், பிளே-ஆஃப் சுற்று 19-ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

அதன் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் 19, 20 தேதிகளிலும், அரையிறுதியின் முதல் பகுதி 23, 24 தேதிகளிலும், 2-ஆவது பகுதி 28, 29 தேதிகளிலும் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

மோகன் பகான் வெற்றி: இதனிடையே, லீக் சுற்றில் வியாழக்கிழமை ஆட்டத்தில் மோகன் பகான் 4-0 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை சாய்த்தது. அந்த அணிக்காக ஹெக்டா் யஸ்டே (17’), மன்வீா் சிங் (51’), அனிருத் தாபா (54’), அா்மாண்டோ சாடிகு (59’) ஆகியோா் கோலடித்தனா்.