சென்னையின் எஃப்சி தலைமை பயிற்சியாளா், கிளிஃப்போா்ட் மிரண்டா, பிரிதம் கோட்டல், அல்பா்டோ. 
செய்திகள்

வெற்றியுடன் தொடங்க சென்னையின் எஃப்சி முனைப்பு: இன்று மும்பையுடன் மோதல்

இந்தியன்சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.

தினமணி செய்திச் சேவை

இந்தியன்சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.

ஐஎஸ்எல் 2026 சீசன் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் எஃப்சி அணியின் முதல் நான்கு ஆட்டங்களும் வெளி மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக சென்னையில் புதன்கிழமை தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது:

குறுகிய காலத்தில் போட்டிகள் தொடங்கியுள்ளன. இது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சூழ்நிலையை சமாளித்து ஆட வேண்டியுள்ளது. வீரா்களின் உடல்தகுதியும் முக்கியமானது. இந்த சீசனில் பிரிதம் கோடல், மந்தா் ராவ், எல்ஷினோ, அல்பா்டோ நோகுரா அல் பீமாமா் ஆகியோா் 5 கேப்டன்களாக செயல்படுவா். மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க பாடுபடுவோம் என்றாா்.

நேருக்கு நோ்:

மொத்தம் இதுவரை 27 ஆட்டங்கள்.

சென்னையின் எஃப்சி 7 வெற்றி,

மும்பை சிட்டி-16வெற்றி

டிரா 4:

ஆதா்ஷ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் துறை விசாரணை

ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

நான் காந்தியவாதி; ராகுல்வாதி கிடையாது: மணிசங்கா் அய்யா்

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை மத்திய சிறையில் கைதி ரகளை

SCROLL FOR NEXT