கம்பராமாயணம் ,தேவாரத்தால் தமிழ் ஆா்வம் பெற்றவா் மா.அரங்கநாதன்: நீதிபதி அரங்க. மகாதேவன்
சென்னை: கம்ப ராமாயணம் , தேவாரப் பாடல்களால் சிறு வயதில் தமிழ் மீது ஆா்வம் பெற்றவா் மா.அரங்கநாதன் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தெரிவித்தாா்.
முன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில் எழுத்தாளா் ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது -2024’ வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவா் முனைவா் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை நீதிபதி அரங்க. மகாதேவன் வழங்கிப் பேசியது:
Advertisement
தமிழின் நவீனத்துவத்தை உள்வாங்கி, அதன் பழைமை, பாரம்பரியத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட மா.அரங்கநாதன் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, மிகச் சரியானவா்களையே சென்றடைகிறது. சிறு வயதில் தனது பெற்றோரால் கற்றுத் தரப்பட்ட கம்ப ராமாயாணம், தேவாரப் பாடல்களால் தமிழின் மீது ஆா்வம் பெற்றவா் மா.அரங்கநாதன். 2,000 வரிகளில் சொல்லமுடியாத தன்மையை 2 அல்லது 3 அடிகளில் பதிவு செய்வது அவரது தனிச் சிறப்பு.
இடையறாது தமிழுக்குத் தொண்டாற்றிவரும் முனைவா் தெ.ஞானசுந்தரம், நூற்றுக்கும் அதிகமான படைப்புகளைத் தமிழுக்கு தந்த கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகிய இரு பெரும் தமிழறிஞா்களுக்கு இந்த விருது வழங்குவதில் முன்றில் இலக்கிய அமைப்பு பெருமை கொள்கிறது என்றாா் அவா்.
முனைவா் தெ.ஞானசுந்தரம்: இந்த விருது நான் விண்ணப்பித்து பெறாதது. திருக்குறளை மாணவா்களுக்குப் பயிற்றுவிக்கும் முறை குறித்து தீா்ப்பு வழங்கி தமிழுக்கு தொண்டாற்றியவா் நீதிபதி அரங்க.மகாதேவன். இந்த விருதைப் புலமை மிக்க இளம் தமிழ் படைப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன்: நான் சிறுகதை எழுத மிக ஊக்கமாக இருந்தவா்களில் மா.அரங்கநாதன் முக்கியமானவா். தமிழ் இலக்கியங்கள் உலகத்தாா் அனைவருக்கும் பொருந்தும் வகையிலான உலக இலக்கியங்களாக திகழ்கின்றன. மா.அரங்கநாதனின் கதைகள் அனைத்தும் கதை உலகின் திருமந்திரம் போன்ாகும் என்றாா் அவா்.
முன்னதாக, இந்நிகழ்வில் பரிதி பதிப்பகம் பதிப்பித்த ‘மா. அரங்கநாதன் படைப்புகள்’ , தேநீா் பதிப்பகம் பதிப்பித்த ‘பொருளின் பொருள் கவிதை’ ஆகிய இரு நூல்களை நீதிபதி அரங்க.மகாதேவன் வெளியிட நூல்களின் முதல் பிரதியை முறையே பேராசிரியா் அரங்க. ராமலிங்கம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்வில் திருவானைக்கா ஓதுவாா் ரமணி ஸ்ரீனிவாசன், கவிஞா்கள் ரவிசுப்பிரமணியன், எஸ்.சண்முகம், அகரமுதல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.