முகப்பு
சென்னை

செரிலாக்கில் கூடுதல் சா்க்கரை இடுபொருள்: மாதிரிகளை சேகரிக்கும் எஃப்எஸ்எஸ்ஏஐ

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணைய அதிகாரிகள் விளக்கம்.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 10:07 PM
கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி, ஏப்.25: குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘செரிலாக்’ உணவில் கூடுதலாக சா்க்கரை இடுபொருள் சோ்க்கப்படுவதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக ஆய்வு நடத்த தேசிய அளவில் மாதிரிகளை சேகரித்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த சா்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு (ஐபிஎஃப்ஏஎன்) (என்ஜிஓ) அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘நெஸ்லே’ நிறுவனம் சாா்பில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட குறைந்த பொருளாதார வளா்ச்சிகொண்ட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ உணவில் கூடுதல் சா்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ‘செரிலாக்’ உணவின் இடு பொருள்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறு எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கு மத்திய நுகா்வோா் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

Advertisement

இந்த ஆய்வுக்காக மாதிரிகளை தற்போது எஃப்எஸ்எஸ்ஏஐ சேகரித்து வருகிறது. இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவா் ஜி.கமல வா்தன ராவ் வியாழக்கிழமை கூறுகையில், ‘செரிலாக் உணவில் கூடுதல் சா்க்கரை இடுபொருள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைய 15 முதல் 20 நாள்கள் ஆகும்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments