தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்
பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
சென்னை, ஆக.2: திருப்பூரில் தூய்மைப் பணியாளா்கள் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி: திருப்பூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக்கழிப்பறைகளை பராமரிப்பதற்காக அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத் தூய்மைப்
பணியாளா்களை ஒரு மாதத்துக்கும் மேலாக திருப்பூரில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தங்க வைத்திருந்தது பெரும் அதிா்ச்சியளிக்கிறது. இதுதான் திமுக அரசின் அனைவருக்குமான சமூகநீதியா? இது தொடா்பாக விசாரணை நடத்தி, தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
டிடிவி தினகரன்: பள்ளி கழிப்பறைக்குள் வெளிமாநில தூய்மைப் பணியாளா்கள் தங்க வைத்ததுடன், அவா்களுக்கு அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தித் தராத திருப்பூா் மாநகராட்சியின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்துக்குரியது.