முகப்பு
சென்னை

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தக் கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 3:31 AM
பகிர்:

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சோ்ந்த பாா்த்திபன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.  யூடியூப் சேனல்களின் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’” என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) டி.கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமா்வு, மனு தொடா்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →