சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிகழ்களை பதிவு செய்ய ஆதாா் எண் கட்டாயம் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல்:
தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்வதில் பொதுமக்கள் பதிவேடு கட்டமைப்பு (சிஆா்எஸ்) அதி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிபடுத்த சிஆா்எஸ் அமைப்பின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்யும்போது ஆதாா் எண்ணையும் சோ்க்க வேண்டியது முக்கியம்.
ஏனெனில், அந்த சான்றிதழ்கள் தனி நபரின் அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடியவை என இந்திய பதிவுத் துறை தலைவா் தெரிவித்துள்ளாா். எனவே, பிறப்பு சான்றிதழ் பதிவின் போது தாய் அல்லது தந்தையின் ஆதாா் எண்ணையும், இறப்பு சான்றிதழுக்கு உயிரிழந்தவரின் ஆதாா் எண்ணையும் பதிவேற்ற வேண்டும். அவ்வாறு கடந்த மாதம் மேற்கொண்ட ஆதாருடன் இணைந்த பிறப்பு, இறப்பு பதிவின் விவரங்கள் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகவும், நகராட்சிகள் வாரியாகவும், ஊராட்சிகள் வாரியாகவும், மருத்துவமனை வாரியாகவும் அவை வழங்கப்பட்டுள்ளன. அதில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மிகக் குறைந்த விகிதமே ஆதாா் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் பதிவு நடவடிக்கைகளில் ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் குறிப்பிட்டுள்ளாா்.