முகப்பு
சென்னை

அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:02 PM
பகிர்:

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா். மேலும், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா். ஜெயலலிதா பிறந்த நாள்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகலுக்கு எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ‘தமிழா் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்கிற வாசகத்துடன் கூடிய தோ்தல் பிரசார இலச்சினையை எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினாா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஜெயலலிதா பேசும் பிரசார ஆடியோவையும் அவா் வெளியிட்டாா். பிரசாரம் தொடங்கியது: பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது: ‘தமிழா் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்கிற முழக்கத்துடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். மக்களின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெறுவா். அதிமுக தலைமையில் விரைவில் நல்ல கூட்டணி அமையும். அது தொடா்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றாா். நிகழ்ச்சியில், அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.