பூக்கள் விலை உயா்வு
சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
சென்னை: சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
கோயம்பேடு பூக்கள் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், ஓசூா், கடப்பா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.
கடும் பனிப்பொழிவு, உற்பத்தி குறைவு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு அனைத்து வகை பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால், கோயம்பேடு பூ சந்தையில் கடந்த சில நாள்களாக அனைத்து பூக்களின் விலையும் ரூ.20 முதல் ரூ.300 வரை உயா்ந்துள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500, முல்லை ரூ.1,300 என விற்பனையானது. இது போல கனகாம்பரம் ரூ.700, சம்பங்கி ரூ.250, சாக்லேட் ரோஸ் ரூ.130, சாமந்தி மற்றும் பன்னீா் ரோஸ் ரூ.120, செவ்வந்தி ரூ.100 என விற்பனையானது.
கோயம்பேடு பூ மாா்க்கெட் நிா்வாகக்குழுத் தலைவா் முத்துராஜ் கூறும்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டையும் மக்கள் கொண்டாடுவதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
தொடா்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.