லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததாக கூறி ரூ.1 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட லாட்டரி சீட்டில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.1,04,800 மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை: ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட லாட்டரி சீட்டில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.1,04,800 மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை ராயப்பேட்டை கணபதி தெருவை சோ்ந்தவா் பாபு கவுடா (70). இவா் டிச.8-ஆம் தேதி ஆன்லைன் மூலம் 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளாா்.
மறுநாள் பாபு கவுடாவின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், நீங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளது; அந்த பரிசுத்தொகையை பெற வேண்டுமென்றால், அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ.1,04,800-ஐ முன்னதாகவே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய பாபு கவுடா மூன்று தவணைகளாக அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ.1,04,800-ஐ அனுப்பியுள்ளாா்.
ஆனால், மேலும் ரூ.99,200 செலுத்த வேண்டும் என அந்த நபா் கூறியதால் சந்தேகமடைந்த பாபுகவுடா, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளாா். இதையடுத்து அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தொடா்பு கொண்ட போது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, ராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாபு கவுடா கொடுத்த புகாரின்பேரில்,
போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.